ADDED : மார் 16, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்,;கலைச்சங்கமம் , விஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் விருது வழங்கும் விழா நடந்தது.
நித்யா ராஜேஸ்வரன் வரவேற்றார். டாக்டர் ஜெயவனிதாமணி தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்கீதா, ராஜகோபால், ஞானகுரு, புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். மாநில கால்பந்து வீரர் ராஜேந்திரகுமார் கலந்து கொண்டார். கயல்விழி, சோலைகுமாரி பாஸ்கரன், உமாதேவிராமர், அம்பிகா வாழ்த்தினர். பத்திரிக்கையாளர் திவ்யா பரதநாட்டியம் சபாடினி ரோபோடிக்ஸ் ஹரிணி யோகா வீராங்கனைகள் மோனிகா, காமாட்சி உமா, அண்ணபூரணி, ஆசிரியர் கிருத்திகா, இல்லத்தரசி சபீனா கலந்து கொண்டனர். வீராங்கனை சித்ரா நன்றி கூறினார்.