ADDED : ஜன 08, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி : செம்பட்டி அருகே சீவல்சரகு மேற்குத்தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மதன்குமார் 24. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்றிரவு 7:30 மணிக்கு டூவீலரில் திண்டுக்கல் நோக்கி சென்றார்(ஹெல்மெட் அணியவில்லை). வத்தலக்குண்டு சென்ற லாரி மோதியது. வலது கால் துண்டாகி காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.