sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மஞ்சள் நிறத்தில் வரும் குடிநீர்: பழநி 7வது வார்டு மக்கள் அச்சம்

/

மஞ்சள் நிறத்தில் வரும் குடிநீர்: பழநி 7வது வார்டு மக்கள் அச்சம்

மஞ்சள் நிறத்தில் வரும் குடிநீர்: பழநி 7வது வார்டு மக்கள் அச்சம்

மஞ்சள் நிறத்தில் வரும் குடிநீர்: பழநி 7வது வார்டு மக்கள் அச்சம்


ADDED : ஏப் 11, 2025 05:30 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: நகராட்சியால் சப்ளை செய்யும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பழநி நகராட்சி 7 வது வார்டு மக்கள் நோய் தொற்று அச்சத்தில் உள்ளனர்.

வடக்கு ரதவீதி, கீழ்வடம்போக்கி தெரு, மாசிமலை சந்து, திருநீலகண்டன் சந்து,மாடவீதி,கருப்புசாமி சந்து,குமரவேல் சந்து,தேவேந்திரன் சந்து,ரங்காச்சாரி சந்து,சேஷன் ரங்கன் சந்து,உடுமலை ரோடு,தேரடி, பெரியநாயகி அம்மன் கோயில் பகுதிகளை கொண்ட இந்த வார்டு பழநி நகரத்தின் குறுகிய சந்து, சாலைகளை உடையது. இப்பகுதியில் நாயகி அம்மன் கோயில் உள்ளதால் விழாக்காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இப்பகுதியில் நாய் தொல்லை மிக அதிகம் உள்ளது. நகராட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

நாய்களால் விபத்து


உதய பாரதி, விவசாயி, குமரவேல் சந்து :இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள்,முதியவர்களை விரட்டுவதால் சிரமம் அடைகின்றனர். டூவீலரில் செல்லும் நபர்களையும் நாய்கள் துரத்துவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

நோய் தொற்று


மாரியம்மாள்,குடும்பத்தலைவி, வடக்கு ரதவீதி : குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் நோய் தொற்று அச்சம் உள்ளது. இதை தவிர்க்க பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் நிரந்தரமாக இப்பகுதியில் அமைக்க வேண்டும். இதனால் நோய்வாய்ப்பட்ட மக்கள் பயனடைவார்கள்.

சாக்கடையால் சிரமம்


சாமிநாதன், ஸ்டுடியோ உரிமையாளர், அச்சு ஆபீஸ் மாரிமுத்து சந்து : கோவை ரோட்டில் சாக்கடையை சீர் செய்ய வேண்டும். நகராட்சி முடியும் இடத்தில் அலங்கார வளைவுகள் அமைத்தால் பழநி அழகாக தெரியும். குடிநீரை பரிசோதனை செய்து வழங்க வேண்டும்.

குடிநீர் சுத்திகரிக்கப்படும்


சுரேஷ்,கவுன்சிலர் (திமு.க.,):குடிநீர் மஞ்சள்நிறத்தில் வருவது குறித்து நகராட்சி கூட்டத்தில் பேசி நிவர்த்தி செய்வேன். அணையில் இருந்து வரும் தண்ணீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி எல்லை பகுதிகளில் அலங்கார வளைவு அமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us