ADDED : அக் 18, 2024 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: கரூர் மாவட்டம் கடவூர் மாலப்பட்டியை சேர்ந்தவர் மதுபாலன் 23. அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் சிவா 23, இருவரும் டூவீலரில் பாளையம் முத்தம்பட்டி ரோட்டில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதியது.
டூவீலரை மதுபாலன் ஓட்டினார். டூவீலர் மீது வேன் மோதியதில் மதுபாலன், சிவா இருவரும் காயமடைந்தனர். கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதுபாலன் இறந்தார்.குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.