/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு தர்ம அடி
/
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு தர்ம அடி
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு தர்ம அடி
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு தர்ம அடி
ADDED : டிச 23, 2024 04:49 AM
சாணார்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் சிறுமியை கத்தி முனையில் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்தனர். போலீசார் போக்சோவில் அவரை கைது செய்தனர்.
சாணார்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி தாய், தந்தை,சகோதரிகளுடன் வசிக்கிறார். நேற்று இரவு அவர் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது மாலைமேடு புதுார் பகுதியை சேர்ந்த மனோஜ் 30, சிறுமியின் வாயை பொத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு கத்தி முனையில் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
சிறுயியை காணாததால் குடும்பத்தினர் தேடினர். அப்போது காட்டுப்பகுதியில் மனோஜ் சிறுமியை மிரட்டியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மனோஜ், அவர்களையும் மிரட்டினார். இதனால் அவர்கள் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். மனோஜ், அதிக ஆட்களை கண்டு அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். சாணார்பட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, தலைமையிலான போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர். மனோஜ் மீது ஆள்கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.