/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடிப்படை வசதிகளில் ஜீரோ; மனுக்கள் கொடுத்தும் நோயூஸ் பிரச்னைகள் பிடியில் மூவேந்தர் நகர் குடியிருப்போர்
/
அடிப்படை வசதிகளில் ஜீரோ; மனுக்கள் கொடுத்தும் நோயூஸ் பிரச்னைகள் பிடியில் மூவேந்தர் நகர் குடியிருப்போர்
அடிப்படை வசதிகளில் ஜீரோ; மனுக்கள் கொடுத்தும் நோயூஸ் பிரச்னைகள் பிடியில் மூவேந்தர் நகர் குடியிருப்போர்
அடிப்படை வசதிகளில் ஜீரோ; மனுக்கள் கொடுத்தும் நோயூஸ் பிரச்னைகள் பிடியில் மூவேந்தர் நகர் குடியிருப்போர்
ADDED : நவ 13, 2024 05:03 AM

திண்டுக்கல்: உபயோகமற்ற நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி, முறையற்ற ரோடுகள், அள்ளப்படாத குப்பையால் பரவும் தொற்றால் விபரீதம், அடிப்படை வசதிகள் செய்து தருவதில் பாகுபாடு என பல்வேறு பிரச்னைகளுடன் திண்டுக்கல் மூவேந்தர் நகர் குடியிருப்போர் பரிதவிக்கின்றனர்.
திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் உள்ளது மூவேந்தர் நகர். இதில் அன்பின் நகர், கூட்டுறவு நகர், வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்குகின்றன. இதன் குடியிருப்போர் நல சங்க தலைவர் ஜோதிலிங்கம், செயலாளர் வெங்கடசுப்ரமணி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுரவ தலைவர் அன்பு கிறிஸ்டியன் கூறியதாவது:
எங்கள் பகுதி பெரிய பரப்பளவைக் கொண்டது.
சில அடி துாரமே உள்ள சீலப்பாடி செல்லும் வழியில் உள்ள தெருக்களில் உள்ள வசதிகளில் பாதி கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. சீலப்பாடி பகுதியின் ஒரு பகுதி முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது.
பக்கத்து தெரு பகுதிகளில் ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வசிப்பதால் அந்த தெருக்களின் வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஊராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் தருகிறது. ஆனால் அதற்கு அடுத்து சில அடி துாரமே உள்ள எங்கள் தெருவில் வசிப்போர்கள் குறைகளை கேட்பதில்லை.
சில நாட்களில் ஊராட்சி மன்றத்தின் பதவி காலம் முடிகிறது.
அடுத்த தேர்தல் எப்போது நடக்குமென தெரியவில்லை. ஆனால் தற்போது வரை பல மனுக்கள் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. ரோடு முதல் குப்பை வரையிலான அனைத்து வரிகளையும் நாங்களும் முறையாக செலுத்திதான் வருகிறோம். இருந்தும் அதற்கான வசதிகள் செய்து கொடுப்பதில் பாகுபாடு பார்க்கப்படுகிறது.
வெங்கடேஸ்வரா நகர் - மூவேந்தர் நகர் இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது.
அது பயன்பாட்டில் இல்லை. அதற்காக போடப்பட்ட போர்வெல் இயந்திரம் வரை தனியாரின் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. அதற்கான வரியையும் ஊராட்சிதான் கட்டுகிறது.
ஆனால் எங்கள் பகுதியில் தண்ணீர் வசதிகள் இல்லை. ஒரு பொதுக்குழாய், குடிநீர் தொட்டி என எதுவுமே இல்லை,
குப்பை சேகரிக்கும் பணி தொய்வாக உள்ளது. குப்பை எங்கே கொட்டுவதென்றே தெரிவதில்லை. எவரும் சரிவர வந்து அள்ளுவதில்லை. இதனால் நோய் ஏற்படும் சூழல்தான் உள்ளது.
எந்த பகுதிகளிலும் சாக்கடைகளே இல்லை. இதனால் மழைபெய்தால் சாக்கடைகள் தான் ரோட்டிகள் ஓடுகின்றன.
ஒரு கால்வாய் கூட கட்டப்படவில்லை. குறிப்பாக ரோடு வசதிகள் என்பதே அறவே இல்லை. பல இடங்களிலும் மண் ரோடுகள்தான் உள்ளது. தெரு விளக்குகளும் முறையாக இல்லை. இப்படி எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி தனித்தீவில் இருப்பது போல் உணர்கிறோம் என்றனர்.