/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்
/
பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்
ADDED : ஜன 18, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோாபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், குண்டம் விழா முடிந்த நிலையில், மலர் பல்லக்கில் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு, கடந்த, 12ல் இரவு கோபியில் தெப்போற்சவம் நடந்தது. இதையடுத்து கடந்த, 13 முதல், 16ம் தேதி வரை புதுப்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.
நஞ்சகவுண்டம்பாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்கு, பாரியூர் அம்மன் நேற்று முன்தினம் இரவு விஜயம் செய்தார். அப்பகுதி மக்கள் சார்பில் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.