ADDED : பிப் 15, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்
உலகில் உள்ள முருக பக்தர்கள், தினமும் பாராயணம் செய்யும் கந்த சஷ்டி கவசம், சென்னிமலை கோவிலில் தான் அரங்கேற்றப்பட்டது. இயற்றிய ஸ்ரீபாலன்தேவராய சுவாமிகள், காங்கேயம் அருகில் மடவிளாகத்தை சேர்ந்தவர். மைசூரு தேவராச உடையாரின் காரியஸ்தரில் ஒருவராவார். முருக பக்தரான இவர் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி நாளில், அனல்வாதம், புனல்வாதம் செய்து அரங்கேற்றம் செய்தார்.