/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக்கை ஓசி தந்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
/
பைக்கை ஓசி தந்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : மார் 15, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக்கை ஓசி தந்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
காங்கேயம்:காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்தமான டூவீலரை, அந்நியர் சிலர் ஓட்டி வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான படங்களும் வெளியாகின.
இதுகுறித்து எஸ்.பி., விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாம் நிலை காவலர் பிருத்விக்கு வழங்கப்பட்ட பைக் என்பதும், நட்பு அடிப்படையில் நண்பர்கள் சிலர் வாங்கி ஓட்டி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து பிருத்வியை, ஆயுதப்படைக்கு இடம் மாற்றி, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.