/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீதிமன்றத்தில் கையாடல்தலைமை எழுத்தர் கைது
/
நீதிமன்றத்தில் கையாடல்தலைமை எழுத்தர் கைது
ADDED : மார் 15, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீதிமன்றத்தில் கையாடல்தலைமை எழுத்தர் கைது
சத்தியமங்கலம்:சத்தி நீதிமன்றத்தில் கையாடல் செய்த தலைமை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.ஈரோடு, அவ்வையார் வீதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ், 38; சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 2024 செப்., முதல் தலைமை எழுத்தராக பணிபுரிகிறார்.
பல்வேறு வழக்குகளில் வசூலிக்கப்பட்ட தொகை, 3.39 லட்சம் ரூபாயை, வங்கி கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து நீதித்துறை நடுவர் அளித்த புகாரின்படி, ஞானபிரகாஷை சத்தி போலீசார் நேற்று கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.