sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு'ஏ.டி.எம்., இயந்திரம் உடைஞ்சு போச்சு...!

/

'போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு'ஏ.டி.எம்., இயந்திரம் உடைஞ்சு போச்சு...!

'போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு'ஏ.டி.எம்., இயந்திரம் உடைஞ்சு போச்சு...!

'போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு'ஏ.டி.எம்., இயந்திரம் உடைஞ்சு போச்சு...!


ADDED : ஏப் 01, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு'ஏ.டி.எம்., இயந்திரம் உடைஞ்சு போச்சு...!

ஈரோடு:ஈரோடு, கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் முரளி, 35; தனியார் நிறுவனம் சார்பில் மாநகராட்சி பகுதியில் தண்ணீர் திறக்கும் பணி செய்கிறார். நேற்று முன் தினம் இரவு தன் வீட்டருகே, திருநகர் காலனியில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு சென்றார். அங்கு இரு மிஷின் உள்ளது. ஒரு மிஷினில் கார்டை சொருகி பணம் எடுக்க முயற்சித்துள்ளார். நீண்ட நேரமாகியும் பணம் வராததால், ஆத்திரமடைந்த முரளி மிஷினை காலால் உதைக்க, ஒரு பகுதி சேதம் அடைந்தது. மேலும் கார்டு சொருகும் பகுதியில் கையால் குத்தியதில் சேதமடைந்தது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். நேற்று காலை ஏ.டி.எம்., காவலாளி வந்து பார்த்தபோதுதான் மிஷின் சேதமானது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் தரப்பில், கருங்கல்பாளையம் போலீசில் புகார் தரப்பட்டது.

ஏ.டி.எம்., மையத்தில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், முரளி என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். மிஷினை சேதப்படுத்தியபோது முரளி குடிபோதையில் இருந்துள்ளார். இதுபோன்ற செயல்களில் அவர் பலமுறை ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us