/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பு
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பு
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பு
ADDED : செப் 12, 2024 11:38 AM
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில், வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டீ.ஓ.,) ஆய்வு மேற்கொண்டார்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் விதிகளை மீறி இயக்கப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா உத்தரவிட்டார். இதன்படி, ஈரோடு மேற்கு வட்டார போக்கு-வரத்து அலுவலர் பதுவை நாதன் தலைமையில் நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
பஸ்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்-ளதா? அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்ப-டுகிறதா? கூடுதல் பயண கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. முறையான வழித்தட விவரம் மற்றும் கட்டண விவரம் இல்லா-தது, சீட் பெல்ட் அணியாமல் பஸ்களை இயக்கியதாக, 10 பஸ்-களின் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இரு பஸ்களில் இருந்து ஏர்ஹாரன் அகற்றப்பட்-டது. ஆய்வின்போது, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேந்திர-குமார், சிவக்குமார் உடனிருந்தனர்.