ADDED : ஜன 17, 2025 01:50 AM
அ நிறம் | அளவு
காவிரியில் சுழலில் சிக்கிபனியன் தொழிலாளி பலி
கொடுமுடி, :கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளபட்டி பட்டாணி தெருவை சேர்ந்த முகமது அனிபா மகன் ஷஹிம், 18; திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி. பள்ளப்பட்டியில் இருந்து பஷீர் ஷஹீமே் உள்ளிட்ட, ௧௦ பேர் கொடுமுடிக்கு நேற்று வந்தனர். ஊஞ்சலுார் காவிரி ஆற்றில் அனைவரும் குளித்தனர். அப்போது ஷஹிம் சுழலில் சிக்கியுள்ளார். தகவலறிந்து சென்ற கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஷஹிம் உடலை மீட்டனர்.
