ADDED : ஏப் 12, 2025 01:34 AM
அ நிறம் | அளவு
வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை
ஈரோடு, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், வக்பு சட்ட திருத்தத்தை, திரும்ப பெறக்கோரி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் உமர்பரூக் தலைமை வகித்தார். செயலர் அல்அமீது வரவேற்றார். ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமாசபை செயலர் முகம்மது ஹபீல் தாவூத் உட்பட பலர் பேசினர். மாநகர் மாவட்ட காங்., மண்டல தலைவர் ஜாபர்சாதிக் உட்பட பலர் பங்கேற்றனர்.
