/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆறு உழவர் சந்தைகளில் 79.72 டன் காய்கறி விற்பனை
/
ஆறு உழவர் சந்தைகளில் 79.72 டன் காய்கறி விற்பனை
ADDED : செப் 02, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறை என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று ஆறு சந்தைகளுக்கும், 79.72 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி விற்றன.
இதன் மதிப்பு, 26.42 லட்சம் ரூபாயாகும். மொத்தம், 11,881 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர். ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு 35.62 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 12
லட்சம் ரூபாய்க்கு விற்றது. இங்கு, 6,367 வாடிக்கையாளர்கள் வந்தனர்.