/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'அம்பேத்கரை கொள்கை தலைவராக திராவிட இயக்கங்கள் ஏற்காதது ஏன்?'
/
'அம்பேத்கரை கொள்கை தலைவராக திராவிட இயக்கங்கள் ஏற்காதது ஏன்?'
'அம்பேத்கரை கொள்கை தலைவராக திராவிட இயக்கங்கள் ஏற்காதது ஏன்?'
'அம்பேத்கரை கொள்கை தலைவராக திராவிட இயக்கங்கள் ஏற்காதது ஏன்?'
ADDED : டிச 07, 2024 07:17 AM
அந்தியூர்: பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அந்தியூரில் நேற்று நடந்தது. இதில் பா.ம.க., சமூக நீதி பேரவை தலைவரும் வழக்க-றிஞருமான பாலு பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறியதா-வது:
அம்பேத்கரின் இட ஒதுக்கீடு கொள்கையை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். சமூக நீதிக்கான இயக்கம் என்று
பறை-சாற்றி கொள்ளும் திராவிட இயக்கங்கள், அம்பேத்கரை ஏன் கொள்கை தலைவராக ஏற்கவில்லை.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான தலைவராக அம்பேத்கரை சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடிய-வில்லைஅம்பேத்கர் எல்லா மக்களும் கொண்டாடப்பட வேண்டிய தலைவர். கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை, சி.பி.ஐ.,
விசா-ரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, தமி-ழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்தது வருத்தம-ளிக்கிறது. இதில் சி.பி.ஐ., விசாரிக்க, அனைத்து முகாந்திரமும் உள்ளது. எனவே உயர்நீதிமன்ற
உத்தரவைத்தான் உச்ச நீதிமன்-றமும் உறுதிப்படுத்தும்.சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த, தமிழக அரசுக்கு உரிமை-யில்லை என்று முதல்வர் கூறியிருப்பது, சமூக நீதி அடிப்படை
கோட்பாட்டுக்கு எதிரானது. இவ்வாறு அவர் பேசினார். அவ-ருடன் மாவட்ட தலைவர் ஜெகதீசன் உட்பட கட்சி நிர்வாகிகள்
உடனிருந்தனர்.