sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரியில் நுழைவுச்சீட்டு பரிசோதனை

/

கொடிவேரியில் நுழைவுச்சீட்டு பரிசோதனை

கொடிவேரியில் நுழைவுச்சீட்டு பரிசோதனை

கொடிவேரியில் நுழைவுச்சீட்டு பரிசோதனை


ADDED : மே 20, 2024 01:56 AM

Google News

ADDED : மே 20, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், நுழைவுச்சீட்டு பரிசோதிக்கப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. அருவியில் குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். நீர்வீழ்ச்சியில் குளிக்க, சுற்றுலா பயணிகளிடம், நீர்வள ஆதாரத்துறை சார்பில், நுழைவு கட்டணமாக, ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான நுழைவுச்சீட்டை பரிசோதிக்காததால், கும்பலாக வருவோர், சர்வசாதாரணமாக ஓசியில் குளித்து சென்றனர்.

இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பாசன உதவியாளர்கள் மூலம், தற்போது நுழைவுச்சீட்டு பரிசோதித்த பின்னரே, தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக சுற்றுலா பயணிகள், தடுப்பணைக்குள் நுழைய ஒரு வழியும், வெளியேற ஒரு வழியும் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் நுழையும் பகுதியில், தற்போது நுழைவுச்சீட்டு பரிசோதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு நீடித்தால், நீர்வள ஆதாரத்துறைக்கு, நுழைவுச்சீட்டு மூலம் வருவாயும் அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. நேற்று வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததால், கொடிவேரி தடுப்பணைக்கு, குறைந்த சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர்.






      Dinamalar
      Follow us