sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பங்களாப்புதுாரில் ௪ பேர் கைது

/

அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பங்களாப்புதுாரில் ௪ பேர் கைது

அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பங்களாப்புதுாரில் ௪ பேர் கைது

அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் பங்களாப்புதுாரில் ௪ பேர் கைது


ADDED : ஜூலை 20, 2024 07:14 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம் : பங்களாப்புதுார் அருகே புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி பிள்ளையார் கோவில் வீதியில், புறம்போக்கு இடத்தை ஆக்கிர-மித்து ஏழு பேர் வசிக்கின்றனர்.

இந்த இடத்தை மீட்பது தொடர்பாக, சட்ட நடவடிக்கை அறி-விப்பு நோட்டீஸ் வழங்க, கோபி மண்டல துணை தாசில்தார் இலக்கியசெல்வம் தலைமையில், வாணிப்புத்துார் நில வருவாய் ஆய்வாளர் சக்திவேல், புஞ்சை துறையம்பாளையம் அ கிராம வி.ஏ.ஓ., நடராஜ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சென்றனர். பழனியப்பன் மனைவி சரசாள், நோட்டீசை பெற்றுக்கொள்ள முன் வந்தார்.

ஆனால், பங்களாப்புதுார், அண்ணா நகரை சேர்ந்த மதன்-குமார், ரவி, நாகராஜ், அசோக் உள்ளிட்டோர், அரசு அலுவலர்க-ளிடம் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தை பேசியுள்ளனர். நோட்டீஸ் வழங்க விடாமல் தடுத்து, கொலை மிரட்டலும் விடுத்-தனர். இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசில், அரசு அலுவ-லர்கள் தரப்பில் புகார் தரப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்-குப்பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர். கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக பவுனாள் என்பவரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us