/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு
/
44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு
44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு
44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு
ADDED : ஜூலை 06, 2024 06:11 AM
ஈரோடு, : சிப்காட் வளாகத்தில் இருந்து, 44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு, சுத்திகரிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளி-யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் சாயத்தொ-ழிற்சாலைகளின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி-யாகும் திடக்கழிவு, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு மாற்று மூலப்பொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. மத்திய மாசு கட்-டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி, ராமநாதபுரம் மாவட்-டத்தில் கலப்பு உப்பு சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது. இந்-நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கலப்பு உப்புகளை சுத்திகரிப்பு செய்ய அங்கீகாரம் பெற்றுள்ளது.
கடந்த மார்ச் முதல் பெருந்துறை சிப்காட் சாய தொழிற்சா-லையில் இருந்து கலப்பு உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்படி ஜூன் இறுதி வரை, 44 லட்சத்து, 50,000 கிலோ கலப்பு உப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில்லாமல் சிப்காட் வளாகத்தில் இயக்கத்தில் இல்லாத தோல் தொழிற்சா-லைகளின் பொது சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, 450 டன் அளவு திடக்கழிவுகளில், 180 டன் திடக்கழிவு சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு மறு மூலப்பொரு-ளாக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.