/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகருக்கு நீர்வரத்து 6,973 கன அடியாக அதிகரிப்பு
/
பவானிசாகருக்கு நீர்வரத்து 6,973 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகருக்கு நீர்வரத்து 6,973 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகருக்கு நீர்வரத்து 6,973 கன அடியாக அதிகரிப்பு
ADDED : ஆக 10, 2024 07:45 AM
புன்செய் புளியம்பட்டி: நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிக-ளான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில், கடந்த மாத இறு-தியில் பெய்த கன மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து கணிச-மாக அதிகரித்து, அணை நீர்மட்டம், 95 அடியை எட்டியது. கடந்த சில நாட்களாக, நீர்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்-ததால் அணைக்கு நீர் வரத்து சரிந்தது.
இந்நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 1,769 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 6,973 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணை நீர்மட்டம், 95.74 அடி, நீர் இருப்பு, 25.5 டி.எம்.சி.,யாக உள்ளது.
அணையில் இருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்-திற்கு, 900 கனஅடி நீர், குடிநீர் தேவைக்காக, 100 கனஅடி நீர், கீழ்பவானி வாய்க்காலில், 5 கனஅடி நீர் என மொத்தம், 1,005 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

