/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட அளவிலான மாரத்தான் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
/
மாவட்ட அளவிலான மாரத்தான் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
மாவட்ட அளவிலான மாரத்தான் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
மாவட்ட அளவிலான மாரத்தான் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
ADDED : செப் 12, 2024 11:40 AM
ஈரோடு: ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில், 150க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கடந்த ஆக., 12ம் தேதி, சர்வதேச இளைஞர் தினத்தை முன்-னிட்டு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரு-கிறது. அதன் தொடர்ச்சியாக மாரத்தான் போட்டியை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய போட்டி, திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளி வரை சென்றடைந்-தது. 16க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த, 150க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு, 10,000, இரண்டாம் பரிசு, 7,000, மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.முன்னதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எய்ட்ஸ் தடுப்பு குறித்த வில்லைகளை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்-தினார். இணை இயக்குனர் அம்பிகா (நலப்பணிகள்), துணை இயக்குனர் சோமசுந்தரம் (சுகாதார பணிகள்), திட்ட மேலாளர் துரைசாமி (மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு) மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

