sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பு

/

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு டிரைவர்களுக்கு அபராதம் விதிப்பு


ADDED : செப் 12, 2024 11:39 AM

Google News

ADDED : செப் 12, 2024 11:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில், வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டீ.ஓ.,) ஆய்வு மேற்கொண்டார்.

பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் விதிகளை மீறி இயக்கப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா உத்தரவிட்டார். இதன்படி, ஈரோடு மேற்கு வட்டார போக்கு-வரத்து அலுவலர் பதுவை நாதன் தலைமையில் நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

பஸ்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்-ளதா? அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்ப-டுகிறதா? கூடுதல் பயண கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. முறையான வழித்தட விவரம் மற்றும் கட்டண விவரம் இல்லா-தது, சீட் பெல்ட் அணியாமல் பஸ்களை இயக்கியதாக, 10 பஸ்-களின் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இரு பஸ்களில் இருந்து ஏர்ஹாரன் அகற்றப்பட்-டது. ஆய்வின்போது, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேந்திர-குமார், சிவக்குமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us