sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணத்துக்காக தாயை கொன்ற மகன் கைது

/

பணத்துக்காக தாயை கொன்ற மகன் கைது

பணத்துக்காக தாயை கொன்ற மகன் கைது

பணத்துக்காக தாயை கொன்ற மகன் கைது


ADDED : செப் 02, 2024 03:25 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் பணத்துக்காக தாயை, பூட்டால் அடித்து கொன்ற மகனை, போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, வீரப்பன் சத்திரம், பெரியவலசை சேர்ந்தவர் ஆனந்தன், 44; இவர் மனைவி கீதா, 40: இருவரும் விசைத்தறி பட்டறை தொழிலாளர்கள். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஆனந்த-னுடன் அவரது தாய் அங்கம்மாள்,

72, வசித்தார். கடந்த, 30ம் தேதி மாலை வீட்டில் முகத்தில் ரத்த காயங்களுடன் அங்கம்மாள் கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் இறந்து விட்டது தெரிந்தது.மாமியார் முகத்தில் காயம் இருந்ததால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, வீரப்பன்சத்திரம் போலீசில், கீதா புகாரளித்தார். உடற்கூறு பரிசோதனையில் அங்கம்மாள் கொலை செய்யப்பட்-டது உறுதியானதால், சந்தேக மரண

வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர். கடைசியாக வீட்டில் இருந்தது ஆனந்தன் தான் என்பதால், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசா-ரித்தனர். இதில் தாயை கொலை செய்ததை ஆனந்தன் ஒப்பு கொண்டார்.

போலீசில் ஆனந்தன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: மாத தவணையில் டி.வி., மொபைல் போன் வாங்கி இருந்தேன். இதற்கு கடந்த மாதம் பணம் செலுத்தவில்லை. இதனால் தாயிடம் பணம் கேட்டேன். பணம் தர

மறுத்து திட்டியவர், வாக்-குவாதத்தில் ஈடுபட்டார்.ஆத்திரமடைந்த நான், டி.வி.சத்தத்தை அதிகப்படுத்தி, பூட்டை எடுத்து தாயின் முகம், நெற்றி, வாய் உள்ளிட்ட இடங்களில் தாக்-கினேன். ரத்த காயம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார்.பக்கத்தில் இருந்த அனைத்து வீடுகளும் பூட்டியிருந்ததால், கதவை சாத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டேன். என் மகன், பாட்டி மயங்கி விழுந்தது குறித்து தெரிவித்தபோது, எதுவும் தெரியாததுபோல் வீட்டுக்கு

மனைவியுடன் சென்றேன்.தாய்க்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும், அதனால் கீழே விழுந்தி-ருக்கலாம் என தெரிவித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால், என் மனைவி ரத்த காயங்களை பார்த்து சந்-தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் போலீசார் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், கொலை செய்ததை கண்டுபி-டித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தாயை கொன்ற ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us