/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்; ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
/
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்; ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்; ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்; ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
ADDED : ஆக 01, 2024 02:13 AM
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அருகே, தோட்டத்திற்கு குழாய் பதிக்க தடையில்லா சான்று வழங்க விவசாயிகளிடம், 2.40 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பஞ்., தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் காசோலையில் கையெ-ழுத்திடும் அதிகாரத்தை, ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்-டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் பஞ்., கொக்கரக்குண்டியை சேர்ந்த விவசாயிகள் கனகராஜ், ரவிச்சந்திரன் ஆகியோரிடம், தோட்டத்திற்கு குடிநீர் குழாய் பதிக்க தடை-யில்லா சான்று வழங்க, இரண்டு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கொத்தமங்கலம் பஞ்.,தலைவர் மல்-லிகா, துணைத்தலைவர் சண்முகம், ஊராட்சி செயலர் ராஜூ ஆகிய மூன்று பேர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பஞ்., தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் காசோலையில் கையெ-ழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், ஊராட்சி செயலர் ராஜூவை சஸ்பெண்ட் செய்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கொத்த-மங்கலம் பஞ்.,க்கு நிர்வாக அலுவலர்களாக பவானிசாகர் வட்-டார வளர்ச்சி அதிகாரி மற்றும் மண்டல வட்டார வளர்ச்சி அதி-காரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.