/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்
/
ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்
ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்
ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்
ADDED : ஜூலை 23, 2024 01:48 AM
தாராபுரம் : பஞ்சாயத்து வளர்ச்சி பணிகளுக்கான நிதியை தராமல் இழுத்த-டிப்பதாக கூறி, யூனியன் அலுவலகத்தில் இரவை கடந்து பஞ்., தலைவி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சி புதுார் ஊராட்சி தலைவர் செல்வி, 36; தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்-துக்கு நேற்று மதியம் வந்தார். பதாகையுடன் வளாகத்தின் மத்-தியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
''தனது பஞ்சாயத்து பகுதியில் வளர்ச்சி பணிகளுக்கான, 2.75 கோடி ரூபாய் நிதியை, 8 மாத காலமாக தொடர்ந்து வலியுறுத்-தியும், அதிகாரிகள் தர மறுக்கின்றனர். தீர்வு காணும் வரை காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன்,'' என்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்-பாடும் ஏற்படாததால் அவர் சென்றார்.
இதனால் செல்வி தனது போராட்டத்தை தொடர்ந்தார். இரவு வரை போராட்டம் நீடித்த நிலையில், இரவு, 9:00 மணியளவில் தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி வந்தார். செல்வியிடம் நடந்-ததை கேட்டு, அது தொடர்பாக அதிகாரிகளிடம் போனில் பேசினார். பிறகு கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதா-கவும், போராட்டத்தை கைவிடும்படியும் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த செல்வி, நிலுவை நிதி தொடர்பான நிர்வாக அனுமதி கிடைக்கும் வரை, நகர மாட்டேன் என்று தெரிவித்து விட்டார். இதனால் தாசில்தாரும் அங்கிருந்து கிளம்பி சென்றார்.