ADDED : பிப் 22, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு நாராயணவலசு, திருமால் நகரை சேர்ந்தவர் அருக்-காணி, 80; கணவரை இழந்த நிலையில் தனியாக வசிக்கிறார்.
நேற்று அதிகாலை அருக்காணி வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த ஒரு பெண், அவரை தாக்கி ஒன்றரை பவுன் தங்க தோடு-களை பறித்து தப்பினார். அருக்காணியின் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வந்தனர். அதற்குள் பெண் தப்பிவிட்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.