sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'ஊழலற்ற ஆட்சியே முதல்வரின் லட்சியம்

'ஊழலற்ற ஆட்சியே முதல்வரின் லட்சியம்

'ஊழலற்ற ஆட்சியே முதல்வரின் லட்சியம்


ADDED : மே 31, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 03:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

'கோபி:''தமிழகத்தில் ஒரு ஊழலற்ற ஆட்சி என்பது தான், முதல்வரின் லட்சிய பயணமாக உள்ளது,'' என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபி கொளப்பலுார் சாலையை சேர்ந்தவர், சுரேஷ், 42; இவரின் மனைவி மஞ்சுளா, 38; சிறுவலுார் அருகே பன்றி இறைச்சி கடை நடத்தினர். கடந்த, 24ம் தேதி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இடி-மின்னல் தாக்கி தம்பதி பலியாகினர். இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், பலியான தம்பதியின் மகள் அனுசுயா, 18, மகன் கதிரேஷ், 16, ஆகியோரை, கொளப்பலுாரில் உள்ள அவர்களது வீட்டில், நேற்று காலை சந்தித்து ஆறுதல் கூறினார். பேரிடர் நிவாரண நிதியாக எட்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆணையை வழங்கினார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இடி-மின்னல் தாக்கி பலியான தம்பதியர் குழந்தைகள், என்ன கல்வி பயின்றுள்ளனரோ, அதற்கேற்ப அரசின் சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சிதான், முதல்வரின் லட்சிய பயணமாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில், நாங்கள் அனைவரும், அதற்கான பணிகளை தெளிவோடு, அதை

நடைமுறைப்படுத்த உள்ளோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us