/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
110 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
/
110 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ADDED : பிப் 25, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு அருகே மேட்டுக்கடையில், 110 கர்ப்பிணிகளுக்கு சமு-தாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை வழங்கி, அமைச்சர் முத்துசாமி பேசினார்.
மாவட்டத்தில், 14 யூனி-யனில், 1,500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்-தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கு, 110 பேருக்கு நடக்கி-றது. சீர்வரிசையாக தட்டு, பழம், வளையல், பூ, மஞ்சள், குங்-குமம், 5 வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார்.