/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய் தொல்லை அதிகரிப்பு கவுன்சிலர் முறையீடு
/
தெருநாய் தொல்லை அதிகரிப்பு கவுன்சிலர் முறையீடு
ADDED : ஜூலை 20, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் : காங்கேயம் நகராட்சி கூட்டம், தலைவர் சூரியபிரகாஷ் தலை-மையில் நேற்று நடந்தது. கமிஷனர் கனிராஜ், துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வைத்தனர். குடிநீர் குழாய் பராமரித்தல், சாலை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்-துவது தொடர்பான, 87 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்-பட்டன.
தங்கள் வார்டுகளில் சேகரமாகும் குப்பையை அப்புறப்படுத்து-வதில் துாய்மை தொழிலாளர்கள் மெத்தனமாக உள்ளனர். குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டன. கால்நடை, குழந்தைகளை கடித்து வருவதால், உடனடி நடவடிக்கை எடுக்கவும் கவுன்சி-லர்கள் கோரிக்கை விடுத்தனர்.