/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் கடைகளில் 'டிஜிட்டல் பேமெண்ட்' திட்டம் அமைச்சர் முத்துசாமி தகவல்
/
டாஸ்மாக் கடைகளில் 'டிஜிட்டல் பேமெண்ட்' திட்டம் அமைச்சர் முத்துசாமி தகவல்
டாஸ்மாக் கடைகளில் 'டிஜிட்டல் பேமெண்ட்' திட்டம் அமைச்சர் முத்துசாமி தகவல்
டாஸ்மாக் கடைகளில் 'டிஜிட்டல் பேமெண்ட்' திட்டம் அமைச்சர் முத்துசாமி தகவல்
ADDED : செப் 04, 2024 09:08 AM
ஈரோடு: ''டாஸ்மாக் கடைகளில், 'டிஜிட்டல் பேெமண்ட் திட்டம்' விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது,'' என்று, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில், தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டி-களை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்-துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறி-யதாவது:
ஈரோடு சி.என்.கல்லுாரியை அரசு கல்லுாரியாக மாற்றுவது தொடர்பான கோப்பு, குடியரசு தலை-வரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்-ளது. இதை விரைவுபடுத்த தி.மு.க., - எம்.பி.,க்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உபரிநீர் திட்டம் என்பதால், உபரிநீர் வரும் போது தான் மோட்-டார்களை இயக்க முடியும். தற்போது குளங்க-ளுக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளதாக விவசா-யிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மாநகராட்சியில் வரி உயர்வு தொடர்பாக கவுன்-சிலர்கள் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் கழிவு நீரை சுத்தகரிப்பு செய்வதற்காக பொது சுத்-தகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக, இரண்டொரு நாளில் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்.டாஸ்மாக் கடைகளில், மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க, 12 ஆயிரம் பில்லிங் மெஷின் வாங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் இந்த மெஷின் வைக்-கப்பட்டு விட்டால் கூடுதல் விலைக்கு விற்கப்ப-டுவது முற்றிலும் தடுக்கப்படும். விரைவில் இது நடைமுறைக்கு வரும்.ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களுடன் பேச்சு-வார்த்தை நடத்தப்படுகிறது. டிஜிட்டல் பேெமண்ட் திட்டமும் விரைவில் அமல்படுத்-தப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.