sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டாஸ்மாக் கடைகளில் 'டிஜிட்டல் பேமெண்ட்' திட்டம் அமைச்சர் முத்துசாமி தகவல்

/

டாஸ்மாக் கடைகளில் 'டிஜிட்டல் பேமெண்ட்' திட்டம் அமைச்சர் முத்துசாமி தகவல்

டாஸ்மாக் கடைகளில் 'டிஜிட்டல் பேமெண்ட்' திட்டம் அமைச்சர் முத்துசாமி தகவல்

டாஸ்மாக் கடைகளில் 'டிஜிட்டல் பேமெண்ட்' திட்டம் அமைச்சர் முத்துசாமி தகவல்


ADDED : செப் 04, 2024 11:11 AM

Google News

ADDED : செப் 04, 2024 11:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ''டாஸ்மாக் கடைகளில், 'டிஜிட்டல் பேெமண்ட் திட்டம்' விரைவில் அமல்படுத்தப்-பட உள்ளது,'' என்று, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோட்டில் வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில், தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டி-களை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்-துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

ஈரோடு சி.என்.கல்லுாரியை அரசு கல்லுாரி-யாக மாற்றுவது தொடர்பான கோப்பு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்-பட்டுள்ளது. இதை விரைவுபடுத்த தி.மு.க., - எம்.பி.,க்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உபரிநீர் திட்டம் என்பதால், உபரிநீர் வரும் போது தான் மோட்டார்களை இயக்க முடியும். தற்போது குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளதாக விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாநக-ராட்சியில் வரி உயர்வு தொடர்பாக கவுன்சி-லர்கள் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் கழிவு நீரை சுத்தகரிப்பு செய்வதற்காக பொது சுத்தகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக, இரண்டொரு நாளில் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்.டாஸ்மாக் கடைகளில், மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க, 12 ஆயிரம் பில்லிங் மெஷின் வாங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் இந்த மெஷின் வைக்-கப்பட்டு விட்டால் கூடுதல் விலைக்கு விற்கப்-படுவது முற்றிலும் தடுக்கப்படும். விரைவில் இது நடைமுறைக்கு வரும். ஊழியர்களின் சம்-பள உயர்வு தொடர்பாக டாஸ்மாக் தொழிற்சங்-கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. டிஜிட்டல் பேெமண்ட் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.






      Dinamalar
      Follow us