/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் 5 பேக்கரிகளுக்கு அபராதம்
/
காங்கேயத்தில் 5 பேக்கரிகளுக்கு அபராதம்
ADDED : செப் 07, 2024 08:02 AM
காங்கேயம்: காங்கேயத்தில் சென்னிமலை ரோட்டில் இயங்கி வரும் பேக்கரி மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் கடைகளுக்கு, நோட்டீஸ் மற்றும் அபராதம் விதித்து காங்கேயம் உணவு பாதுகாப்பு அதிகா-ரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக காங்கேயம் பகுதியில் சில பேக்கரிகள் மற்றும் உணவகங்களில், காலாவதி தின்பண்டங்கள் விற்பதாக, மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பினர். இதைய-டுத்து கலெக்டர் உத்தரவின் படியும், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்த-லின்படியும், காங்கேயம் உணவு பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்-வரன், காங்கேயத்தில் சென்னிமலை ரோட்டில் உள்ள பேக்கரி-களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார். இதில் காலாவதி தின்பண்டங்களை விற்பனை செய்ய வைத்திருந்த ஐந்து கடைக-ளுக்கு தலா, 2,௦௦௦ வீதம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார்.