/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொது இடத்தில் செப்டிக் டேங்க் கழிவை கொட்ட முயன்றதால் ரூ.10,000 அபராதம்
/
பொது இடத்தில் செப்டிக் டேங்க் கழிவை கொட்ட முயன்றதால் ரூ.10,000 அபராதம்
பொது இடத்தில் செப்டிக் டேங்க் கழிவை கொட்ட முயன்றதால் ரூ.10,000 அபராதம்
பொது இடத்தில் செப்டிக் டேங்க் கழிவை கொட்ட முயன்றதால் ரூ.10,000 அபராதம்
ADDED : பிப் 22, 2025 05:17 AM
ஈரோடு: செப்டிக் டேங்க் கழிவை ஏற்றி வந்த லாரி, ஈரோடு சோலார் பேரேஜ் அருகே, சாலையோர பள்ளத்தில் நேற்று வெளியேற்ற முயன்றது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கவனித்து தடுத்து நிறுத்தியதுடன், மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.
சுகாதார அலுவலர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர்கள் கதி-ரேசன், நல்லசாமி மற்றும் அலுவலர்கள் சென்று சோதனை நடத்-தினர். இதில் கழிவை வெளியேற்ற முயன்றதை உறுதி செய்து, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, முறையாக வெளியேற்ற அறிவு-றுத்தினர்.இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், முதன் முறையாக கழிவை வெளியேற்ற முயன்றதால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்-டது. அடுத்தடுத்த முறைகளில் இதே தவறை செய்தால், 25,000 ரூபாய் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும். இவ்-வாறு கூறினர்.