ADDED : ஆக 31, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் தாலுகா பகுதியில், பல்வேறு பகுதிகளில் கிராவல் மண், மணல், ஓடக்கற்கள் கடத்தல் நடக்கிறது. அதிகாரிகள் அவ்-வப்போது ஏதாவது ஒரு வாகனத்தை பிடித்து வழக்குப்பதிவு செய்து, தங்கள் வேலையை முடித்து கொள்வதாக, மக்கள் மத்-தியில் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் காங்கேயம் நால்ரோடு-கீரனுார் சாலையில், கீரனுார் வி.ஏ.ஓ., அசோக்குமார் உள்ளிட் வருவாய் அலுவலர்கள் சோதனையில், ஒரு லாரியில், கிராவல் மண் கடத்தி செல்லப்படு-வது தெரிந்தது. திருப்பூரை சேர்ந்த
கிரஷர் உரிமையாளரின் அறி-வுரைப்படி, கிராவல் மண்ணை திருடி விற்பணைக்கு கொண்டு சென்றதாக, லாரி டிரைவர் மனேகரன் ஒப்புக்கொண்டார். இதைய-டுத்து லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த
காங்கேயம் போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.