/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் திருட்டு - கொள்ளையால் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து
/
தொடர் திருட்டு - கொள்ளையால் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து
தொடர் திருட்டு - கொள்ளையால் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து
தொடர் திருட்டு - கொள்ளையால் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து
ADDED : செப் 04, 2024 09:06 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்த குற்ற சம்பவங்கள் காரணமாக நள்ளிரவு நேரங்களில் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து மேற்கொண்டு, தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்-றனர்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்டு அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடு-மலை ஆகிய, ஐந்து சப்-டிவிஷன்கள் உள்ளன. கடந்த சில வாரங்களாக மாவட்ட பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட தொடர் குற்ற சம்ப-வங்கள் அரங்கேறி வந்தது. இதை தடுக்க தனிப்-படை அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு, காங்கயம் நகரில், இரண்டு குடியிருப்பு பகுதியை நோட்டமிட்ட, நான்கு பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் ஏழு வீடுகளில் கைவரிசை காட்டி, 25 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தனர். இக்கும்-பலை போலீசார் பிடிக்க சென்ற போது, ஆயுதங்-களால் தாக்க முயற்சி செய்தும், வீடுகளின் மீது கற்களை வீசியும் தப்பினர்.
உடுமலை, மடத்துக்குளம் போன்ற பகுதியில் நடந்த குற்ற சம்பவங்களால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. கொள்ளை நடந்த வீடு-களில் கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர், திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா ஆய்வு மேற்-கொண்டனர். கொள்ளை கும்பலை பிடிக்க, ஆறு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.துப்பாக்கியுடன் ரோந்து
இச்சூழலில், மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை நீக்கவும், போலீசார் மீது நடந்த தாக்குதல் முயற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் இரவு ரோந்து மேற்கொள்ளும் போலீசார் முதல் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., உள்-ளிட்டோர் துப்பாக்கியுடன் ரோந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து, 23 ஸ்டேஷன்கள் பகுதியில், 300 போலீசார் ரோந்து பணியில் துப்-பாக்கியுடன் சென்றனர்.
மேலும், மாவட்ட எல்லை பகுதி, முக்கியமான சந்திப்பு, பிரதான ரோடுகளில் போலீஸ் குழுக்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சந்தே-கப்படும் விதமாக வந்த டூவீலர், கார், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை பலத்த சோதனைக்கு பின், முழு விபரங்களை பெற்ற பின்னே அனுப்பி வைத்தனர். இந்த ரோந்து வரும் நாட்களில் தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.திருப்பூரிலும் உஷார்
புறநகரில் நடந்த தொடர் குற்ற சம்பவங்கள் கார-ணமாக மாநகரில் போலீசார் உஷார் படுத்தப்பட்-டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் எவ்வித தொய்வு இல்லாமலும், போலீஸ் சோதனை சாவடிகள், முக்கிய சந்திப்பு-களில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.