sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்த ஆசிரியர்கள் மறியல்

/

பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்த ஆசிரியர்கள் மறியல்

பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்த ஆசிரியர்கள் மறியல்

பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்த ஆசிரியர்கள் மறியல்


ADDED : ஜூலை 04, 2024 07:16 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு காளைமாட்டு சிலை அருகே, மாநகராட்சி நடுநிலைப்-பள்ளி முன், தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், தொடக்கப் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர். டிட்டோ ஜாக் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராமசாமி முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பறிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்-243ஐ ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுத-லுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்-கையை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த, 130 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

* தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கோபி அருகே கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி டி.இ.ஓ., அலுவலகம் முன் குவிந்தனர். அரசாணை 243ஐ ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடு-பட்டனர். ஆசிரியர் ராணி தலைமையில் மறியல் செய்ய முயன்ற, 167 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us