sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

களை கட்டிய ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு

/

களை கட்டிய ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு

களை கட்டிய ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு

களை கட்டிய ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு


ADDED : ஜூலை 20, 2024 07:08 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மன் கோவில்கள் களை கட்டின. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்-மனை வழிபட்டனர்.

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்ப-டுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை, அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களை, மக்கள் வெகு விமரி-சையாக கொண்டாடுவர். இந்த வகையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, அதிகாலை முதலே அம்மன் கோவில்களுக்கு, பெண்கள் படையெடுக்கத் தொடங்கினர்.

ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறந்து, பல்வேறு சிறப்பு அபி-ஷேகம் செய்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். கோவில் வளாகத்தில் ஒரு சில பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதேபோல் காரை வாய்க்கால் சின்ன மாரியம்மன், பெரியவ-லசு சின்ன மாரியம்மன், கொங்காலம்மன், கள்ளுக்கடைமேடு பத்-ரகாளியம்மன் கோவில், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில், எல்லை மாரியம்மன் கோவில், சூரம்பட்டி மாகாளி-யம்மன் கோவில், வீரப்பன்சத்திரம் காவிரி ரோடு சின்னமாரி-யம்மன் கோவில் உள்பட மாநகரில் அனைத்து அம்மன் கோவில்-களிலும், சிறப்பு பூஜை, அலங்காரம் என கோவில்கள் களை கட்-டின.

* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெண் பக்தர்கள், அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்டத்தில் தீப-மேற்றி வழிபட்டனர். உச்சிகால பூஜையில் பக்தர்கள் குவிந்தனர். இதேபோல் சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றி-யம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* அந்தியூர் பத்ரகாளியம்மன், அங்காளம்மன், தவிட்டுப்பா-ளையம் சவுடேஸ்வரியம்மன், அழகு முத்துமாரியம்மன் கோவில் மற்றும் சுற்று வட்டார அம்மன் கோவில்களில், ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு அமர்க்களமாக நடந்தது.






      Dinamalar
      Follow us