sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு

/

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு


ADDED : ஜூலை 02, 2024 07:21 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் குண்டடம், பழைய நவக்கொம்பு பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை, இடையன் கிணறு அருகே திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக புது கட்டடம் கட்டப்பட்டது. இடையன் கிணறு பகுதியில் நேற்று கடை திறக்க மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து குண்டடம் நால்ரோடு பகுதியில், 300க்கும் மேற்-பட்ட மக்கள், மறியல் போராட்டத்தில் குதித்தனர். பைபாஸ் சாலை என்பதால் போக்குவரத்து பாதித்தது.

தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி, டாஸ்மாக் துணை மேலாளர் நந்தகோபால் உள்ளிட்ட அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும், 15 நாட்களுக்கு இங்கு கடை திறக்கப்படாது. அதேசமயம் மக்களின் எதிர்ப்பு குறித்து, கலெக்டரிடம் தெரிவிக்-கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us