sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்

/

தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்

தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்

தாயின் கள்ளக்காதலன் கொலை தீர்த்துக்கட்டிய மகன் சிக்கினார்


ADDED : ஜூலை 08, 2024 07:10 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், : ஈரோடு மாவட்டம் ஆசனுார் அருகே, தொட்டபுரம் வனப்பகு-தியில் கடந்த ஜூன், 26ம் தேதி, வனத்துறை பணியாளர்கள் ரோந்து சென்றபோது, மனித எலும்புக்கூடு கிடந்தது. அவர்கள் தகவலின்படி ஆசனுார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தொட்டபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ரங்கசாமி மனைவி முத்துமணி, ௪௩; இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கூலி தொழி-லாளி குமார், ௪௦, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை மகன் நாகமல்லு கண்டித்தும் முத்துமணி தொடர்ந்தார்.

இந்நிலையில் மே மாதம், 27-ம் தேதி இரவு முத்துமணி, குமார் ஒன்றாக இருந்ததை நாகமல்லு பார்த்துள்ளார். இதனால் ஆத்திர-மடைந்தவர், சித்தப்பா மகன் மாதவனுடன் சேர்ந்து, கட்டையால் அடித்து குமாரை கொன்றார். பிறகு உடலை வனப்பகுதிக்குள் வீசி சென்றது விசாரணையில் தெரிந்தது. நாகமல்லு, 25, முத்து-மணி, 43, மாதவன், 24, ஆகியோரை, ஆசனுார் போலீசார் கைது செய்தனர். சத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்-தனர்.






      Dinamalar
      Follow us