ADDED : மார் 22, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக்கிரமிப்பை அகற்ற கெடு
அந்தியூர்:அந்தியூர் வாரச்சந்தை வணிக வளாகம் முன், வாடகை கார், தள்ளுவண்டி கடை மற்றும் இதர கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறைய புகார்களும் சென்றன. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வணிக வளாக கடைகள் முன்பு ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள கார், கடைகளை, 25ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறினால் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என, ஒலிபெருக்கி மூலம் நேற்று எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.