நாமக்கல் : நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 500 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 505 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை, கடந்த ஒரு வாரத்தில், ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை(காசுகளில்) நிலவரம்: சென்னை, 565, ஐதராபாத், 510, விஜயவாடா, 550, பர்வாலா, 530, மும்பை, 555, மைசூரு, 575, பெங்களூரு, 560, கோல்கட்டா, 590, டில்லி, 555 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ முட்டைக்கோழி, 92 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 103 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

