ADDED : பிப் 21, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2ம் நாளாககலெக்டர் ஆய்வு
அந்தியூர்:உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தில், அந்தியூர் தாலுகாவில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இரண்டாவது நாளாக நேற்றும் குறை கேட்டும், ஆய்விலும் ஈடுபட்டார். அண்ணாமடுவு அருகே பச்சாம்பாளையம் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தை பார்வையிட்டும், தினசரி வழங்கப்படும் பால் அளவு, ஈவுத்தொகை குறித்து கேட்டறிந்தார். அந்தியூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

