sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூரில் மாணவர்கள் ஓட்டிய 5 பைக் பறிமுதல்

/

அந்தியூரில் மாணவர்கள் ஓட்டிய 5 பைக் பறிமுதல்

அந்தியூரில் மாணவர்கள் ஓட்டிய 5 பைக் பறிமுதல்

அந்தியூரில் மாணவர்கள் ஓட்டிய 5 பைக் பறிமுதல்


ADDED : ஜூலை 06, 2024 08:41 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 08:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர் : தமிழகத்தில், 18 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர் டூவீலர் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், வாகனம் பறிமுதல் செய்து, அபராதம் விதிப்ப-துடன், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

இந்த வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில், போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்-குவரத்து ஆய்வாளர் குழு, 18 வயதுக்கும் குறை-வானோர் டூவீலர் ஓட்டுகின்றனரா என்பது குறித்து அவ்வப்போது சோதனையில் ஈடுபடு-கின்றனர்.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டா-னாவில், பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன், அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்-பெக்டர் கஸ்துாரி, போலீசார் நேற்று இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளி சீருடை அணிந்தும், கலர் ஆடை அணிந்தும் டூவீலர் ஓட்டி வந்த ஐந்து மாணவ, மாணவியர் சிக்கினர். வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்களின் பெற்றோரை வரவழைத்-தனர். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்ட அனுமதிக்க கூடாது. இனி இதுபோல் டூவீலர்-களில் வந்தால் பெற்றோர்களான உங்களுக்-குத்தான் அபராதம் விதிக்கப்படும் என்று எச்ச-ரித்து

அனுப்பினர்.






      Dinamalar
      Follow us