ADDED : மார் 08, 2024 07:21 AM
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று கூடியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 70 கன்றுகள்; 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை மாடுகள்; 25,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள்; 75,000க்கும் மேற்பட்ட விலையில், 100க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகளும் விற்பனைக்கு வந்தன.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை அதிகம் வாங்கி சென்றனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், பசுந்தீவன தட்டுப்பாடும், உலர் தீவன விலை உயர்வாலும் மாடுகளை விற்பனைக்கு அதிகமாக வந்தன. வரத்தான, 850 கால்நடைகளில், 90 சதவீதம் விற்பனையாகின.

