ADDED : செப் 03, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில்
அருகே புதுப்பை, தங்கமேட்டை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கராஜ் மகள்
காவியா, 14; அரசு பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம்
குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது
மயங்கி விழுந்தார்.
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, மேல்
சிகிச்சைக்காக கரூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காவியா நேற்றிரவு
இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.