ADDED : பிப் 15, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அனைத்து வங்கிகளிலும் காலி பணியிடங்களை அவ்வப்போது நிரப்ப வேண்டும்.
தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். வங்கித்-துறையில் வாரத்துக்கு, 5 நாட்கள் பணி நாளாக கொண்டு வர வேண்டும்.
வங்கித்துறையில் நிரந்தர பணி மூலமே அலுவலர்-களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, ஈரோட்டில் ஸ்டேட் பாங்க் கிளை முன், ஒன்றிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்ட-மைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இணை செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை யில் திரளான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.