sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாரதியார் நினைவு நாள்: மாணவர்கள் மரியாதை

/

பாரதியார் நினைவு நாள்: மாணவர்கள் மரியாதை

பாரதியார் நினைவு நாள்: மாணவர்கள் மரியாதை

பாரதியார் நினைவு நாள்: மாணவர்கள் மரியாதை


ADDED : செப் 12, 2024 11:41 AM

Google News

ADDED : செப் 12, 2024 11:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் உள்ள கிளை நுாலகத்தில், பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்-பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில், அரசு கிளை நுாலகம் உள்ளது. இங்கு சுதந்திர போராட்ட தியாகியும், கவிஞருமான பாரதியார் கடந்த, 1921 ஜூலை 31ல் நேரடியாக வந்து 'மனிதனுக்கு மரண-மில்லை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இது அவ-ரது கடைசி பொது நிகழ்வாக அமைந்தது. அதன் பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டு செப்.,11ல் இறந்தார். அவரது நினைவு ஆண்டுதோறும் போற்றப்பட்டு வருகிறது. அவ-ரது நினைவு தினமான நேற்று, கிளை நுாலகத்தில் உள்ள அவரது சிலைக்கு நுாலகர் மற்றும் வாசகர் வட்டத்தினர் மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர்.பின் பள்ளி மாணவ, மாணவிகள் பாரதியார் சிலைக்கு மலர் துாவி மரியாதை செய்து வணங்கினர். அவர்களுக்கு பாரதியாரின் தேச பக்தி குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட நுாலக இருப்பு சரிபார்ப்பு அலுவலர் ரவிச்சந்திரன், நுாலகர் ஷர்மிளா ஆகியோர் பங்கேற்றனர்.* சென்னிமலை மகாகவி பாரதி சிந்தனை பேரவை சார்பில், நடந்த விழாவுக்கு பேரவை தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பொன்னு-சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பார-தியின் பெருமை குறித்து திருக்குறள் பேரவை தலைவர் திருவள்-ளுவர், தமிழ்சங்க தலைவர் சிவசுப்பிரமணியம், நுகர்வோர் பாது-காப்பு சங்க செயலாளர் கந்தசாமி ஆகியோர் பேசினர், ரவி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us