தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரேஷன்கடைகளில் 'இ-கே.ஒய்.சி.,' முகாம்

ரேஷன்கடைகளில் 'இ-கே.ஒய்.சி.,' முகாம்

ரேஷன்கடைகளில் 'இ-கே.ஒய்.சி.,' முகாம்


ADDED : செப் 20, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழகம் முழுவதிலும் ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகை பதிவு அல்லது கண் கருவிழி பதிவு அல்லது இரண்டையும் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி இ-கே.ஒய்.சி., பதிவு கடந்த ஆக., மாதம், 4 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. பதிவு செய்யாத நிலையில் நேற்றும் சிறப்பு முகாம் நடந்தது.இதுபற்றி வட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: குடும்ப உறுப்பினர்களில் சிலர் வெளியூர், வெளிநாடுகளில் படித்தும், வேலை செய்தும் வருவதால், 100 சதவீத பதிவை எட்ட இம்முகாம் நடக்கிறது. குறிப்பாக 'பி.எச்.எச்., - ஏ.ஏ.ஒய்., - பி.எச்.எச்., அன்ட் என்.பி.எச்.எச்.,' கார்டுதாரர்கள் பதிவு செய்வதற்கான முகாம் நடத்தப்பட்டது. பதிவு செய்யாத கார்டுதாரர்களுக்கு போனில் அழைப்பு விடுத்தும் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us