sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

/

கோபி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கோபி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கோபி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்


ADDED : ஆக 08, 2024 06:44 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி நகராட்சியின், அவசர கூட்டம் சேர்மன் நாகராஜ் (தி.மு.க.,) மற்றும் கமிஷனர் சுபாஷினி ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:

தி.மு.க., கவுன்சிலர் குமார சீனிவாஸ்: வணிக வளாக கட்ட-டத்தை இடித்து கட்ட வேண்டாம் என கூறவில்லை. அதற்கு சிறிது காலம் காத்திருக்கலாம். இரண்டாண்டில் இதுவரை என் வார்டில் சின்டெக்ஸ் தொட்டி கூட வைக்கவில்லை.

அ.தி.மு.க., கவுன்சிலர் பிரினியோ கணேஷ்: மாதம் நான்கு லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும், நகராட்சி வணிக வளா-கத்தை இடித்துவிட்டு கட்டினால் மூன்றாண்டுகளாகும். அதனால் நம்பியுள்ளவர்களின் தொழில் பாதிக்கும். எனவே, புதிதாக ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு வணிக வளாகம் கட்ட வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு குறித்து புகார் தெரி-வித்தால், சம்பந்தப்பட்ட பணியாளர்களின் அணுகுமுறை சரி-யில்லை.

அ.தி.மு.க., கவுன்சிலர் நாகராஜ்: கீரிப்பள்ள ஓடையில் தடுப்புச்-சுவர் கட்ட வேண்டும். மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வன்: நகராட்சியில் வரியி-னங்கள் ஏதாவது குறைக்க வழி வகை செய்ய வேண்டும். எனது வார்டில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

சேர்மன் நாகராஜ்: வணிக வளாக கட்டடம் பயன்பாட்டுக்கு தகுதி-யற்றதாக, பொதுப்

பணித்துறை அறிக்கை தந்துள்ளனர். அதை பராமரித்தால் வீண் செலவாகும். இயற்கை சீற்றம் ஏதேனும் நடந்து, வயநாடு போன்று சம்பவம் நடந்தால், வணிக வளாக கட்டடத்துக்கு யார் பொறுப்பேற்க முடியும். கீரிப்பள்ள ஓடையில் தடுப்புச்சுவருக்-கான வேலை துவங்கப்படும்.

கமிஷனர் சுபாஷினி: தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து, வரியி-னங்களை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலை வசதி செய்து தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us