sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பழைய மொபட்டில் பறக்கும் பணம்

/

பழைய மொபட்டில் பறக்கும் பணம்

பழைய மொபட்டில் பறக்கும் பணம்

பழைய மொபட்டில் பறக்கும் பணம்


ADDED : ஏப் 17, 2024 01:49 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர்:நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் தொகுதியில், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி, பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் அரசியல் கட்சியினர், மாற்று வழிகளை பயன்படுத்தி, பணத்தை எடுத்து செல்கின்றனர்.

இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் கூறியதாவது: தேர்தல் செலவு, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆளுங்கட்சியினரின் பணப் பரிமாற்றத்தை பறக்கும் படை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளின் பணத்தை பறிமுதல் செய்வதில் மட்டுமே குறியாக உள்ளனர். கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே சோதனையிடுகின்றனர். பவானிசாகர் தொகுதி வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் பண பட்டுவாடா செய்து வருகின்றனர். தொழிலாளி போர்வையில் டவுன் பஸ்கள், பழைய மொபட் உள்ளிட்டவற்றில் பணம் எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us